» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் பொன்மாரி தலைமையிலான பறக்கும் படையினரும், காவல்துறையினரும் இணைந்து இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நடராஜன் என்பவரை நிறுத்திச் சோதனையிட்டனர்.
அவரது வாகனத்தில் ரூ.1,54,300 இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், பணத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அந்தத் தொகையை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்து தூத்துக்குடி தாலுகா தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இந்தப் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி தேர்தல் களம்: 5 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை? விஜய் வருகையால் சவாலா?
செவ்வாய் 17, மார்ச் 2026 11:03:39 AM (IST)

பைக் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: இருவர் உயிரிழப்பு - பயணிகள் மீட்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:39:43 AM (IST)

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)


கீதாMar 17, 2026 - 07:57:06 PM | Posted IP 162.1*****