» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)
தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் (23), ஒரு கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை டூவிபுரம் 1-ஆவது தெருவில் ஒரு கட்டுமானப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்த சந்தனராஜ் (25) மற்றும் முத்துராமன் (27) ஆகியோர் ஆட்டோவை கட்டிடப் பணி நடைபெறும் இடத்திலேயே நிறுத்தியுள்ளனர்.
அங்கிருந்த தொழிலாளர்கள் ஆட்டோவை எடுக்குமாறு கூறியபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தனராஜ் மற்றும் முத்துராமன் ஆகிய இருவரும் தாமஸைக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

