» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் (23), ஒரு கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை டூவிபுரம் 1-ஆவது தெருவில் ஒரு கட்டுமானப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்த சந்தனராஜ் (25) மற்றும் முத்துராமன் (27) ஆகியோர் ஆட்டோவை கட்டிடப் பணி நடைபெறும் இடத்திலேயே நிறுத்தியுள்ளனர்.

அங்கிருந்த தொழிலாளர்கள் ஆட்டோவை எடுக்குமாறு கூறியபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தனராஜ் மற்றும் முத்துராமன் ஆகிய இருவரும் தாமஸைக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory