» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்: எஸ்பி துவக்கி வைத்தார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:59:24 AM (IST)
கன்னியாகுமரியில் 85 சிசிடிவி கேமரா வசதி, சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம் ஆகியவற்றை எஸ்பி ஆா். ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நவீன புறக்காவல் நிலையம், 85 சிசிடிவி கேமரா வசதி, ஏஐ இயந்திரம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள் சுந்தர்ராஜ் பெருமாள், அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நவீன ஏஐ இயந்திரத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுற்றுலாப் பயணிகள் தகவல்களை பெறுவதும், அவசர சேவைகளை பயன்படுத்துவதும் சாத்தியமாகும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

திருமண ஆசை காட்டி நர்ஸ் பாலியல் பலாத்காரம் : 16 லட்சம் மோசடி - மத போதகர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:21 AM (IST)

