» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
வியாழன் 27, நவம்பர் 2025 3:46:38 PM (IST)
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் கடனுதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" என்ற பெயரில் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி திட்டம் பிரத்தியோகமாக பெண் தொழில் முனைவோர்களுக்காகவே தமிழ்நாடு அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்; கீழ் நேரடி விவசாயம் / பண்ணை சார்ந்த தொழில்கள் தவிர அனைத்து வியாபாரம், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு 25மூ மானியத்துடன் வங்கி கடனுதவி பெற பெண் தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.10.00 இலட்சம் ஆகும். அதிகபட்ச மானியம் ரூ.2.00 இலட்சம். சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் 5மூ ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள 18 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன்பெற புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விலைப்புள்ளி, சாதி சான்றிதழ், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் https://msmeonline.tn.gov.in/twees/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு நாகர்கோவில், கோணம், தொழிற்பேட்டையில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 04652 260008 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு பயன் பெறலாம். பெண் தொழில் முனைவோர்கள் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி மானியத்துடன் வங்கி கடனுதவி பெற்று தொழில் செய்து பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

