» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்!
புதன் 10, செப்டம்பர் 2025 4:02:00 PM (IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த 2008 வெடிபொருள் விதிகள் மற்றும் 1884 வெடிபொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வருகிற 10.10.2025-ந்தேதிக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள், மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்களுடன், உரிய கணக்கு தலைப்பின் கீழ் (Head of Account: 0070-other Administrative services 60-other services 103 Receipts under Explosive Act 01 Collector of Distric Authorities E-challan code no. 0070-60-109-AA-22738) அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக்கட்டணம் ரூ.500/-ஐ பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியதற்கான அசல் ரசீதினை (செலான்) இணைக்க வேண்டும்.
மேலும் மனுதாரர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் என்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் என்றால் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதமும் விண்ணத்தாரரின் புகைப்படம், முகவரி சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் நிர்வாக காரணங்கள் முன்னிட்டு வருகிற 10.10.2025-ம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும பரிசீலனை செய்யப்படும். அக்டோபர் 10-ம் தேதிக்கு பின்னர் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)

பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)

30% ஊதிய உயர்வு வேண்டும்: 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 3:34:44 PM (IST)

ஸ்டெர்லைட் வழக்கில் கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன் : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:37:02 AM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டப் பேரவை உறுதிமொழிக்குழு குழு ஆய்வு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 5:37:45 PM (IST)

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
புதன் 10, செப்டம்பர் 2025 4:15:51 PM (IST)
