» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 8:24:43 PM (IST)

திருச்செந்தூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த அமலன் மகன் பிரபு (29/14) என்பவரை கடந்த 22.05.2014 அன்று அமலிநகர் மையவாடியில் வைத்து கொலை செய்து புதைத்த வழக்கில் அமலிநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான தயானந்தன் மகன் டெரன்ஸ் (30/25), மைக்கேல் மகன் பிரக்சின் ஷியாஷ்டன் (32/25) மற்றும் ஆல்பர்ட் மகன் இருதய அந்தோணி சிரியல் (32/25) ஆகியோரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் இன்று (13.06.2025) குற்றவாளிகளான டெரன்ஸ், ஷியாஷ்டன், இருதய அந்தோணி சிரியல் ஆகியோருக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் பரணி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா
சனி 14, ஜூன் 2025 3:13:52 PM (IST)

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் பணி: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 13, ஜூன் 2025 5:20:07 PM (IST)

ஜூன் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, ஜூன் 2025 12:39:29 PM (IST)

தோவாளை கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வியாழன் 12, ஜூன் 2025 5:46:04 PM (IST)

புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!
வியாழன் 12, ஜூன் 2025 5:41:27 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை!
வியாழன் 12, ஜூன் 2025 3:27:30 PM (IST)
