» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூர் - சிவத்தையாபுரம் பேருந்தை நீட்டிப்பு செய்ய பொதுமக்கள் கோரிக்கை

புதன் 11, ஜூன் 2025 8:40:35 PM (IST)

திருச்செந்தூர் - சிவத்தையாபுரம் பேருந்தை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பணிமனையில் இருந்து சிவத்தையாபுரம் முதல் திருச்செந்தூர் வரை  அரசு பேருந்து 68 A காலை 10 மணிக்கு சிவத்தையாபுரத்திலிருந்து  திருச்செந்தூர்  சென்று பின் திருச்செந்தூரில் இருந்து மாலை 3.30 மணிக்கு திரும்ப சிவத்தையாபுரம் வந்து பின் மாலை 4 மணிக்கு  சிவத்தையாபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

ஏழு கிராமங்களை கொண்ட சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் மேற்கண்ட 68A பேருந்தை சேர்வைக்காரன்மடம் ஊராட்சி தங்கம்மாள் புரத்திலிருந்து  திருச்செந்தூர் வரை  வழித்தடத்தை நீட்டிப்பு செய்து எம் ஊராட்சி மக்கள் திருச்செந்தூர் அறுபடை முருகன் கோவில் செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக சக்கமாள்புரம் முன்னாள் வார்டு உறுப்பினர் குணபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

கந்தசாமிJun 12, 2025 - 12:39:51 PM | Posted IP 162.1*****

புதுக்கோட்டையிலிருந்து இயக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory