» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருச்செந்தூர் - சிவத்தையாபுரம் பேருந்தை நீட்டிப்பு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
புதன் 11, ஜூன் 2025 8:40:35 PM (IST)
திருச்செந்தூர் - சிவத்தையாபுரம் பேருந்தை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பணிமனையில் இருந்து சிவத்தையாபுரம் முதல் திருச்செந்தூர் வரை அரசு பேருந்து 68 A காலை 10 மணிக்கு சிவத்தையாபுரத்திலிருந்து திருச்செந்தூர் சென்று பின் திருச்செந்தூரில் இருந்து மாலை 3.30 மணிக்கு திரும்ப சிவத்தையாபுரம் வந்து பின் மாலை 4 மணிக்கு சிவத்தையாபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
ஏழு கிராமங்களை கொண்ட சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் மேற்கண்ட 68A பேருந்தை சேர்வைக்காரன்மடம் ஊராட்சி தங்கம்மாள் புரத்திலிருந்து திருச்செந்தூர் வரை வழித்தடத்தை நீட்டிப்பு செய்து எம் ஊராட்சி மக்கள் திருச்செந்தூர் அறுபடை முருகன் கோவில் செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக சக்கமாள்புரம் முன்னாள் வார்டு உறுப்பினர் குணபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா
சனி 14, ஜூன் 2025 3:13:52 PM (IST)

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் பணி: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 13, ஜூன் 2025 5:20:07 PM (IST)

ஜூன் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, ஜூன் 2025 12:39:29 PM (IST)

தோவாளை கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வியாழன் 12, ஜூன் 2025 5:46:04 PM (IST)

புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!
வியாழன் 12, ஜூன் 2025 5:41:27 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை!
வியாழன் 12, ஜூன் 2025 3:27:30 PM (IST)

கந்தசாமிJun 12, 2025 - 12:39:51 PM | Posted IP 162.1*****