» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

புதன் 11, ஜூன் 2025 12:05:51 PM (IST)

சூரங்குடி அருகே பனை மரத்தில் ஏறி பதநீர் எடுக்க முயன்றபோது, தவறி விழுந்து படுகாயம் அடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகில் உள்ள வடக்குசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ராமச்சந்திரன் (62). பனைத் தொழில் செய்து வருகிறார். இன்று காலை அங்குள்ள தோட்டத்தில் உள்ள பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கும்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். 

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் சூரங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சூரங்குடி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி சம்பவ இடத்திற்கு சென்று ராமச்சந்திரன் உடலை பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

ஒருவன்Jun 11, 2025 - 12:46:39 PM | Posted IP 104.2*****

அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory