» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உயர்ரக போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வக்கீல் கைது
புதன் 11, ஜூன் 2025 8:52:10 AM (IST)

நாகர்கோவில் அருகே உயர்ரக போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
குமாி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க எஸ்பி ஸ்டாலின் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 131 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று கோதை கிராமம் ரெயில்வே கேட் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வக்கீலான சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் அரிதான உயர்ரக போதை பொருட்களான மெத்தம் பேட்டமைன், எல்.எஸ்.டி. ஸ்டாம்ப் ஆகிய போதை பொருட்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் மெத்தம் பேட்டமைன் 12.08 கிராமும், எல்.எஸ்.டி. ஸ்டாம்ப் 0.42 மில்லி கிராமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் ஆய்வகத்தில் தயார் செய்யப்படுபவை ஆகும். வெளி மாநிலத்தில் மட்டும் கிடைக்கும் இந்த போதை பொருளை சக்திவேல் வாங்கி வந்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த போதை பொருள் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா
சனி 14, ஜூன் 2025 3:13:52 PM (IST)

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் பணி: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 13, ஜூன் 2025 5:20:07 PM (IST)

ஜூன் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, ஜூன் 2025 12:39:29 PM (IST)

தோவாளை கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வியாழன் 12, ஜூன் 2025 5:46:04 PM (IST)

புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!
வியாழன் 12, ஜூன் 2025 5:41:27 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை!
வியாழன் 12, ஜூன் 2025 3:27:30 PM (IST)
