» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விதிகளை மீறிய 6 ஆட்டோக்கள் பறிமுதல்: ரூ.86 ஆயிரம் அபராதம்!

புதன் 11, ஜூன் 2025 8:15:38 AM (IST)



திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறி இயங்கிய 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் முருகன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன், செயலாக்கப் பிரிவு தனபாலன் ஆகியோா் திருச்செந்தூா் பகுதியில் சோதனை நடத்தினா். இதில், வெளியூா் வாகனங்களை அனுமதியின்றி இயக்குதல், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இயக்குவது, இன்சூரன்ஸ் மற்றும் அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்குவது என 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டோக்களுக்கு மொத்தம் ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

இளையராஜாJun 12, 2025 - 12:05:55 PM | Posted IP 172.7*****

குழசேகரபட்டினம். தசரா. அன்று. ஒரு லாரிக்கு 50பேர் வீதம். 500லாரிகள். வரும். பிடித்து. அபதாரம் போடுவானா? லாரியில் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது. தெரியுமா!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory