» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பள்ளி மாணவர்களிடம் பயணக் கட்டணம் வசூல்: அரசு பேருந்து சிறைபிடிப்பு!
புதன் 11, ஜூன் 2025 8:08:46 AM (IST)

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவர்களிடம் பயணக் கட்டணம் வசூலித்ததால் அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. தங்கம்மாள்புரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்து கணபதி காசிநாதன் உயர்நிலைப் பள்ளி எனும் அரசு உதவி பெறும் பள்ளியில் நல்லாலம்பட்டி, வாலம்பட்டி, கொக்கரசன் கோட்டை, செவல்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பேருந்து பயண அட்டையை பயன்படுத்தியே தினசரி அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பள்ளி மாணவ-மாணவிகள் அரசுப் பேருந்தில் பயணம் செய்வது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்தக் கல்வியாண்டில் மாணவர்களுக்கு புதிய இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வரை அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அட்டை, பள்ளி அடையாள அட்டை மற்றும் பள்ளி சீருடை அணிந்திருத்தல் போன்ற ஏதேனும் ஒரு அடையாளத்துடன் அரசு பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த TN21 N1815 என்ற வாகன பதிவெண் கொண்ட அரசு பேருந்தில் சீருடையில் இருந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த சில தினங்களாக பயணக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(10.06.2025) காலை அப்பள்ளியின் நிர்வாகி பார்த்திபன் மற்றும் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் சுயம்பு தலைமையில், அப்பள்ளி மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கே. தங்கமாள்புரம் கிராமத்தில் வைத்து அரசுப் பேருந்தை சிறைபிடித்தனர்.
இதையடுத்து உடனடியாக விளாத்திகுளம் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர், போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகியை செல்போனில் தொடர்பு கொண்டு "இனி இதுபோன்று பள்ளி மாணவர்களுக்கு பயணக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது... பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பள்ளி சீருடையில் பயணம் செய்தால் பயணக்கட்டணம் இன்றியே பயணம் செய்யலாம்" என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்குச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா
சனி 14, ஜூன் 2025 3:13:52 PM (IST)

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் பணி: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 13, ஜூன் 2025 5:20:07 PM (IST)

ஜூன் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, ஜூன் 2025 12:39:29 PM (IST)

தோவாளை கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வியாழன் 12, ஜூன் 2025 5:46:04 PM (IST)

புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!
வியாழன் 12, ஜூன் 2025 5:41:27 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை!
வியாழன் 12, ஜூன் 2025 3:27:30 PM (IST)

adv BabuJun 11, 2025 - 10:38:05 AM | Posted IP 172.7*****