» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: 2பேர் கைது!
செவ்வாய் 10, ஜூன் 2025 11:51:21 AM (IST)
சுசீந்திரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் மேல தெருவை சேர்ந்த பெயிண்டர் அய்யப்பன் (33). இவரது நண்பர் டேனியல். சம்பவத்தன்று இருவரும் பைக்கில் சுசீந்திரம் அருகே கற்காடு ரயில்வே கிராசிங் அருகே சென்ற கொண்டிருந்தனர். அப்போது சுசீந்திரம் கற்காடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (26), கோட்டார் சபையார்குளத்தை சேர்ந்த அர்ஜுன் (23) ஆகிய இருவரும் சேர்ந்து அய்யப்பனை வழிமறித்தனர்.
பின்னர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கியும், கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1000-த்தை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அய்யப்பன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரசாந்த், அர்ஜுன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 7, ஜூலை 2025 4:29:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)
