» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தோவாளை வட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனாஆய்வு
புதன் 16, ஏப்ரல் 2025 3:30:21 PM (IST)

தோவாளை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தோவாளை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (16.04.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் ஊரகப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் எனவும், அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.3.10 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்துக்குட்பட்ட செண்பகராமன்புதூர் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. கட்டப்பட்டு வரும் வீட்டின் அடிப்படை வசதிகள், கட்டுமான பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொண்டதோடு, கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெற பயனாளிக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைத்திடுவதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகளை கட்டித்தர முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2.40 இலட்சம் வழங்கப்படவுள்ளது. இன்று முதற்கட்டமாக செண்பகராமன்புதூர் பகுதியில் பழுதடைந்த வீடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகுதியானவர்களுக்கு விரைவில் வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் செண்பகராமன்புதூர் புதுக்குளம் தூர்வாரும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஆதிச்சன்புதூர் அங்கன்வாடி மையத்தில் பொருட்கள் வைக்கும் இடம், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், குழந்தைகளுக்கான கழிப்பறை, குடிநீர் வசதி, உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை
புதன் 31, டிசம்பர் 2025 11:46:12 AM (IST)

அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்டு வரட்டும் : விஜய் வசந்த் எம்.பி புத்தாண்டு வாழ்த்து!
புதன் 31, டிசம்பர் 2025 11:33:44 AM (IST)

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)



.gif)