» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளை: 4பேர் கைது
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:17:54 PM (IST)
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது டேவிஸ் புரம் ரோட்டில் கையில் ஆயுதங்களுடன் 4பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த போலீசார் 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தாளமுத்து நகர் சுனாமி காலனி ராமதாஸ் நகரை சேர்ந்த ராஜா மகன் ஜெகன் (20), மகேந்திரன் மகன் சஞ்சய் (20), வண்ணாரப் பேட்டை முருகன் மகன் மாரி செல்வம் (19), மாப்பிள்ளையூரணி திருவள்ளுவர் நகர் செட்டி பெருமாள் மகன் சரவணகுமார் (21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து 4பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 4 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 3:27:24 PM (IST)

காவல்துறை ரோந்து வாகனம் மீது திமுக நகர செயலாளர் கார் மோதல் - 6பேர் காயம்!
புதன் 15, அக்டோபர் 2025 3:20:24 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:05:39 PM (IST)

பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு: குளச்சல் அருகே சோகம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:58:56 PM (IST)

மக்கள்Apr 13, 2025 - 06:15:28 PM | Posted IP 104.2*****