» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளை: 4பேர் கைது
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:17:54 PM (IST)
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது டேவிஸ் புரம் ரோட்டில் கையில் ஆயுதங்களுடன் 4பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த போலீசார் 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தாளமுத்து நகர் சுனாமி காலனி ராமதாஸ் நகரை சேர்ந்த ராஜா மகன் ஜெகன் (20), மகேந்திரன் மகன் சஞ்சய் (20), வண்ணாரப் பேட்டை முருகன் மகன் மாரி செல்வம் (19), மாப்பிள்ளையூரணி திருவள்ளுவர் நகர் செட்டி பெருமாள் மகன் சரவணகுமார் (21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து 4பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 4 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)


மக்கள்Apr 13, 2025 - 06:15:28 PM | Posted IP 104.2*****