» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கைது: போலீசார் தீவிர சோதனை
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 11:50:24 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 13பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் இந்த மலையின் ஒரு பக்கம் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் பலரும் சென்று வரும் நிலையில் இந்த தர்காவில் ஆடு கோழி பலியிட்டதாகவும், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து இந்து முன்னணி சார்பாக திருப்பரங்குன்றம் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக சமூக வலை தளங்ககளில் தகவல் பரவியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்ல முயன்றதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராகவேந்திரா உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதில் 5 பேர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைதை்து மதுரை செல்லும் பஸ்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் மொத்தம் 62 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் போராட்டத்தில் செல்பவர்களை தடுப்பதற்காக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
adakkumuraiFeb 4, 2025 - 01:41:38 PM | Posted IP 172.7*****
ithu jananayaga reethiyil nadaiperum porattathai tadukkum adakkumurai
மேலும் தொடரும் செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

மருத்துவ வசதிகளை மேம்படுத்த கோரி விவாதம்: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
வியாழன் 13, பிப்ரவரி 2025 11:34:34 AM (IST)

10 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் உள்பட 2 பேர் கைது
புதன் 12, பிப்ரவரி 2025 9:03:58 PM (IST)

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
புதன் 12, பிப்ரவரி 2025 4:57:36 PM (IST)

செண்பகராமன்புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
புதன் 12, பிப்ரவரி 2025 11:29:18 AM (IST)

உண்மைFeb 4, 2025 - 06:49:00 PM | Posted IP 172.7*****