» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போக்சோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:53:35 AM (IST)
தூத்துக்குடியில் போக்சோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் மகன் தடிகாரன் (எ) கரும்பன் (62). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் மீது தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ வழக்கு நிலுவையில் இருந்து உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வர இருந்தது.
இந்த நிலையில் கரும்பன் தனது வீட்டின் அருகில் உள்ள கொய்யாமரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை
புதன் 31, டிசம்பர் 2025 11:46:12 AM (IST)

அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்டு வரட்டும் : விஜய் வசந்த் எம்.பி புத்தாண்டு வாழ்த்து!
புதன் 31, டிசம்பர் 2025 11:33:44 AM (IST)

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)



.gif)
SivaSriFeb 4, 2025 - 02:15:27 PM | Posted IP 172.7*****