» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கருங்கல் அருகே 12.750 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3பேர் கைது

சனி 1, பிப்ரவரி 2025 11:09:18 AM (IST)

கருங்கல் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 12.750 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்னர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குமரி  மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.ரா.ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கருங்கல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ 750 கிராம் எடை கொண்ட புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோலப்பபிள்ளை மகன் ஐயப்பன்(65), ராஜேஷ் சிரோமணி என்பவரின் மகன் சசிகுமார்(55), ஏசுநேசன் மகன் தங்கராஜ்(60) ஆகியோரிரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory