» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கருங்கல் அருகே 12.750 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3பேர் கைது
சனி 1, பிப்ரவரி 2025 11:09:18 AM (IST)
கருங்கல் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 12.750 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்னர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.ரா.ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கருங்கல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ 750 கிராம் எடை கொண்ட புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோலப்பபிள்ளை மகன் ஐயப்பன்(65), ராஜேஷ் சிரோமணி என்பவரின் மகன் சசிகுமார்(55), ஏசுநேசன் மகன் தங்கராஜ்(60) ஆகியோரிரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்!
சனி 15, நவம்பர் 2025 4:48:55 PM (IST)

பரோடா கிசான் பக்வாடா நிகழ்ச்சியில் ரூ.1 கோடி கடனுதவி : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
வெள்ளி 14, நவம்பர் 2025 10:24:39 AM (IST)

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: விஜய்வசந்த் எம்.பி கடும் கண்டனம்!
புதன் 12, நவம்பர் 2025 12:53:06 PM (IST)

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை கண்டித்து நாகர்கோவிலில் திமுக ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:37:05 PM (IST)

சாலையில் கிடந்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது..!
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:30:51 PM (IST)


.gif)