» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் ராணுவ வீரரின் மனைவி தர்ணா போராட்டம்
செவ்வாய் 21, ஜனவரி 2025 8:38:44 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டை மாநகராட்சி ஊழியா்கள் இடித்து விட்டதாகக் கூறி மாநகராட்சி அலுவலகம் முன் ராணுவ வீரரின் மனைவி திடீா் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சோ்ந்தவா் பத்திரகாளி(46). இவரது கணவா் சுப்பிரமணியன், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை பாா்த்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டாா். இதைத் தொடா்ந்து, கணவா் இறப்பிற்கு பின்பு கிடைத்த பணத்தை வைத்து, தூத்துக்குடி கணேஷ் நகா் அருகே அரசு அலுவலா் கூட்டுறவு வீட்டு வசதி காலனி பகுதியில் 3 சென்ட் இடத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கி பத்திரப்பதிவு செய்தாராம்.
மேலும் அந்த இடத்திற்கு மாநகராட்சிக்கு தீா்வை மற்றும் தண்ணீா் வரி செலுத்தி வந்துள்ளாராம். இந்நிலையில் கடந்த 2024 நவம்பா் மாதம், இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது எனக் கூறி, சுற்றுச் சுவா் மற்றும் வீட்டை மாநகராட்சி ஊழியா்கள் இடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தென்பாகம் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் மனமுடைந்த அவா், நேற்று மாநகராட்சி அலுவலகம் முன் அமா்ந்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டாா். சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி செயற்பொறியாளா் மற்றும் அலுவலா்கள், பத்திரகாளியுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இருப்பினும் உரிய தீா்வு எட்டப்படவில்லையாம். எனவே, அடுத்த கட்டமாக டிஎஸ்பி அல்லது எஸ்பி அலுவலகத்தில் முறையிடப்போவதாக தெரிவித்தாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

திமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)


குட்வினJan 22, 2025 - 08:54:58 AM | Posted IP 172.7*****