» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கேரளாவில் இருந்து குமரிக்கு காய்கறி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த 2 பேர் கைது: லாரி பறிமுதல்
வியாழன் 9, ஜனவரி 2025 8:17:34 AM (IST)
கேரளாவில் இருந்து குமரிக்கு காய்கறி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் இறைச்சி கழிவுகள் குமரியில் கொட்டப்படும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் இந்த சம்பவம் குறைந்தபாடில்லை. இதற்கிடையே சமீபத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொண்டுவரப்பட்டு நெல்லையில் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பிரச்சினையாக மாறியது.
பின்னர் இந்த மருத்துவக்கழிவுகளை கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் இருந்து குமரியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இவ்வாறு கழிவுகளை கொட்ட வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கேரளாவில் இருந்து கொல்லங்கோடு வழியாக குமரி மாவட்டத்திற்குள் காய்கறி கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரி வந்தது. நித்திரவிளை அருகே தெருவுமுக்கு பகுதியில் வந்த போது அங்கு சோதனையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசாரிடம் காய்கறி கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிக்கியது.
பின்னர் போலீசார் லாரியை ஓட்டி வந்த பணகுடி பகுதியை சேர்ந்த சிவா (29), கிளீனர் மணிகண்டன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் லாரி உரிமையாளரான வள்ளியூரை சேர்ந்த ஜோஸ்வா (35) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே சமயத்தில் காய்கறி கழிவுகளை கேரளாவில் இருந்து ஏற்றி அனுப்பிய நபர் யார்? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:59:11 PM (IST)

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:38:41 PM (IST)

வாக்காளர் பட்டியலை அனைவரும் மிக மிக கவனத்துடன் சரி பார்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
திங்கள் 27, அக்டோபர் 2025 11:34:07 AM (IST)

நான்கு வழிச்சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது: 6 மோட்டார் பைக் பறிமுதல்
திங்கள் 27, அக்டோபர் 2025 8:45:36 AM (IST)

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)


.gif)