» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம் : மக்கள் கோரிக்கை நிறைவேற்றம்!
சனி 7, டிசம்பர் 2024 5:48:22 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேலப் பெருவிளை பொதுமக்களின் 3- வருட கோரிக்கையான அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு மேல பெருவிளை பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் சுற்றுச் சுவர் இல்லாமல் திறந்த வெளியாக இருந்து வந்தது இதனால் ஆடு, மாடு நாய்கள் போன்றவைகள் உள்ளே சுற்றித்திரிந்ததால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வந்தது.
இதனையடுத்து 3- வருடங்களாக சுற்றுச் சுவர் அமைத்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அதனை பார்வையிட்டு தற்போது நடவடிக்கை மேற்கொண்டு ரூ.4. 95 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் செல்வகுமார் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர் அருள் சபிதா ரெக்ஸ்லின் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச் சுவர் அமைத்து தந்த மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)
