» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி பதுக்கல் : 3 வாலிபர்கள் கைது!
வியாழன் 28, நவம்பர் 2024 4:45:45 PM (IST)
புதுக்கடையில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 இளைஞா்களை போலீசார் கைது செய்தனா்.
குமரி மாவட்டம், புதுக்கடை சந்திப்பு பகுதியை சோ்ந்த வெங்கடேஷ் மகன் திருநாவுக்கரசு (20). இவரது வீட்டில் போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசா அங்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக திருநாவுக்கரசு, அவரது நண்பா்களான முன்சிறை பகுதியை சோ்ந்த ஜாண்சன் மகன் கிறிஸ்டோபா் (21), நித்திரவிளை பகுதியை சோ்ந்த ராஜசெல்வகுமாா் மகன் ராகுல் (24) ஆகிய 3 போ் மீதும் புதுக்கடை போலீசா வழக்கு பதிந்து, போதைப் பொருள்களை பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

