» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 25, அக்டோபர் 2024 5:20:36 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மழைநீர் தேங்கிய பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (25.10.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக எந்ததெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருக்கிறதோ அப்பகுதிகளில் மீட்புபணிகளை துரிதப்படுத்தவும், மழைநீர் விரைவில் வடிவதை உறுதிசெய்யவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் இன்று நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செம்மாங்குளம் அவ்வை சண்முகம் சாலை மற்றும் கோட்டார் இரயில்வே சாலை பகுதிகள் வழியாக செல்லும் நீர்நிலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அடைப்பு ஏற்படின், அடைப்புகளை துரிதமாக அகற்றி, தண்ணீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாநகராட்சி உட்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை இதுநாள் வரை வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. இருப்பினும் பேரிடர் காலங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)
