» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மீண்டும் பஸ்கள் இயக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
வியாழன் 17, அக்டோபர் 2024 10:18:11 AM (IST)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை தொடர்ந்து பஸ்களும் இயக்க அனுமதிக்கப்பட்டது.
மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் கடந்த 2-ந்தேதி சாலையில் ஜல்லிகள் பெய்ந்து பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அன்று முதல் மேம்பாலம் வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதைதொடர்ந்து பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் மற்றும் தார் போட்டு சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது.
அந்த பணிகள் நிறைவடைந்தை தொடர்ந்து 13 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் மேம்பாலத்தில் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், கனரக வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் மாற்றுபாதை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து மேம்பாலம் வழியாக பஸ்களும் இயக்க அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள், கேரள பஸ்கள், ஆம்னி பஸ்களும் மேம்பாலம் வழியாக இயங்கப்பட்டன. இதனால் கடந்த சில நாட்களாக மார்த்தாண்டத்தில் ஏற்பட்டு வந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடி சற்று குறைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)

137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 12:48:58 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளால் வணிகம் பாதிப்பு: போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு!
வியாழன் 26, மார்ச் 2026 12:09:02 PM (IST)

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகன சோதனை : தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 12:00:39 PM (IST)

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

