» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்
புதன் 9, அக்டோபர் 2024 12:14:52 PM (IST)
திருவட்டார் அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள செறுகோல் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜார்ஜ் ஹென்றி என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். பெற்றோரும் அந்த பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து, வேறு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியும் பள்ளிக்கு வந்தார். இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றி பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி நடவடிக்கை எடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)
