» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2பேர் மீது வழக்கு: 2 ஆட்டோக்கள் பறிமுதல்!
சனி 28, செப்டம்பர் 2024 5:47:23 PM (IST)

நாகர்கோவிலில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய 2 டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் வேப்பமூடு மற்றும் புன்னை நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, கணபதிபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார், திக்கணங்கோட்டைச் சேர்ந்த ஜெயபாலன் ஆகியோர் ஓட்டி வந்த ஆட்டோக்களை சோதனை செய்த போது இருவரும் குடிபோதையில், ஆட்டோ இயக்கியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆட்டோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு, நீதிமன்றம் மூலமாக தலா ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
