» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இ.எஸ்.ஐ திட்டத்தில் சம்பள தகுதியை 30 ஆயிரமாக உயர்த்த விஜய் வசந்த் கோரிக்கை!
சனி 10, ஆகஸ்ட் 2024 12:41:42 PM (IST)

மாத சம்பளம் ரூபாய் 30,000 வரை பெரும் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ எனப்படும் தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாயை சந்தித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தற்பொழுது மாத ஊதியமாக ரூபாய் 21,000 பெரும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ சேவைகள் வழங்கப்படுகின்றன. முன்பு ரூபாய் 15,000 என்றிருந்த இந்த வரம்பு 2016 ஆம் ஆண்டு ரூபாய் 21,000 என மாற்றி அமைக்கப்பட்டது. தற்பொழுது நிலவி வரும் பொருளாதார சூழ்நிலை மற்றும் விலைவாசியை கணக்கில் கொண்டு இதை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் அரசு மிக அதிகமான தொழிலாளர்கள் பயனடையும் வகையில் இ.எஸ்.ஐ சலுகை பெரும் தொழிலாளர்களின் மாத சம்பள வரம்பை ரூபாய் 30,000 என உயர்த்த வேண்டும். மேலும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் கிடையாது என்ற அமைப்பின் ஆணையை நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதனை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதி மன்றமும் ஏற்று கொண்டது.
ஆனால் இதற்க்கு பின்னரும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. ஆகையால் அமைச்சரகம் இந்த விஷயத்தில் தலையிட்டு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் வழங்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

தமிழன்Aug 10, 2024 - 05:03:57 PM | Posted IP 162.1*****