» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.2,40,000 அபராதம்: போலீசார் அதிரடி!
சனி 10, ஆகஸ்ட் 2024 12:17:18 PM (IST)

கோட்டார் போக்குவரத்து காவல் நிலைய பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், ராமன்புதூர் பள்ளி பகுதி அருகே, கோட்டார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் ஆகிய விதிமுறைகளில் ஈடுபட்ட சுமார் 25 நபர்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட பிரிவுகளின் கீழ் 150 வழக்குகள் பதிவு செய்து ரூ.2 லட்சத்து 40ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அபராதம் செலுத்திய பின் முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களுக்கு முறையான பதிவு எண் பொருத்தி அனுப்பப்பட்டது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாகனம் விடுவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)
