» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் பரவலாக மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
திங்கள் 29, ஜூலை 2024 12:40:41 PM (IST)
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. அதே சமயம் மலையோர பகுதிகளில் அவ்வப்போது சாரல் விழுந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பொழிவு இருந்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
மேலும் நாள் முழுவதும் வானம் கார் மேகம் சூழ்ந்தவாறே காணப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினமான நேற்று திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியலிட்டனர். இதே போன்று சிறுவர் நீச்சல் குளத்திலும் நீச்சலடித்து குளித்து மகிழ்ந்தனர்.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை தொடங்கிய மழையானது பகல் முழுவதும் விட்டு விட்டு பெய்தது. மழை காரணமாக அவ்வை சண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செம்மாங்குடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவிலில் கழிவுநீர் கால்வாய்களில் மணல் நிரப்பியுள்ளது. இதனால் மழைநீர் கால்வாயில் உடனடியாக வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவ்வை சண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பாய்ந்தது. மழை ஓய்ந்தபிறகும் சாலையில் கழிவுநீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)
