» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் பரவலாக மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
திங்கள் 29, ஜூலை 2024 12:40:41 PM (IST)
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. அதே சமயம் மலையோர பகுதிகளில் அவ்வப்போது சாரல் விழுந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பொழிவு இருந்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
மேலும் நாள் முழுவதும் வானம் கார் மேகம் சூழ்ந்தவாறே காணப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினமான நேற்று திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியலிட்டனர். இதே போன்று சிறுவர் நீச்சல் குளத்திலும் நீச்சலடித்து குளித்து மகிழ்ந்தனர்.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை தொடங்கிய மழையானது பகல் முழுவதும் விட்டு விட்டு பெய்தது. மழை காரணமாக அவ்வை சண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செம்மாங்குடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவிலில் கழிவுநீர் கால்வாய்களில் மணல் நிரப்பியுள்ளது. இதனால் மழைநீர் கால்வாயில் உடனடியாக வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவ்வை சண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பாய்ந்தது. மழை ஓய்ந்தபிறகும் சாலையில் கழிவுநீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)
