» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரட்டை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

செவ்வாய் 9, ஜூலை 2024 4:18:47 PM (IST)

கோவில்பட்டியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே உள்ள மீன் கடையில் வைத்து கடந்த 07.06.2024 அன்று அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் வெள்ளத்துரை (49) மற்றும் கிழக்கு பாண்டவர்மங்கலம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மகாராஜன் (எ) டீலக்ஸ் ராஜா (55) ஆகிய இருவரையும் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில்,

இனாம்மணியாச்சி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துராஜ் (எ) கார்த்திக் (32), மந்தித்தோப்பு கணேஷ்நகர் பகுதியில் சேர்ந்த பால்சாமி மகன் மாரிராஜ் (32) மற்றும் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்த காளியப்பன் மகன் சேர்மக்கனி (30)  ஆகிய 3 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். 

அதன் பேரில்  3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி உத்தரவிட்டார். ஆட்சியர்  உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமுருகன் 3பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் உட்பட 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory