» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குலசேகரம் - தக்கலை புதிய பேருந்து சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!
திங்கள் 8, ஜூலை 2024 4:16:33 PM (IST)

குலசேகரம் முதல் தக்கலை வரையிலான புதிய பேருந்து சேவையினை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவாட்டர் ஊராட்சி ஒன்றியம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் புதிய பேருந்து சேவையினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (08.07.2024) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கடைகோடி மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவற்றினை உடன்குடன் நிறைவேற்றி வருகிறார்கள். குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளில் பேருந்து வசதிகள் இல்லாத பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் குலசேகரம் முதல் தக்கலை வரையிலான புதிய பேருந்து சேவை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தானது குலசேகரத்திலிருந்து திருவட்டார், கட்டைக்கால், மாத்தூர், ஆனையடி,வெட்டுக்குழி வழியாக தக்கலை பேருந்து நிலையத்தினை சென்றடையும். பொதுமக்கள் இப்பேருந்து வசதியினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர், ஏற்றக்கோடு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். மேலும் மாத்தூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கான்வாடி மையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து கேட்டதோடு, குழந்தைகளுடன் உரையாடினார்கள். அத்தோடு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்திட தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கண்ணனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் ஜான் பிரைட், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், ஊராட்சி தலைவர்கள் ஹெப்சிபாய் ரோஸ் (ஏற்றக்கோடு), பால்சன் (குமரன்குடி). போக்குவரத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)
