» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குலசேகரம் - தக்கலை புதிய பேருந்து சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!

திங்கள் 8, ஜூலை 2024 4:16:33 PM (IST)



குலசேகரம் முதல் தக்கலை வரையிலான புதிய பேருந்து சேவையினை  அமைச்சர் மனோ தங்கராஜ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவாட்டர் ஊராட்சி ஒன்றியம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் புதிய பேருந்து சேவையினை  பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  இன்று (08.07.2024) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   தமிழ்நாட்டின் கடைகோடி மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவற்றினை உடன்குடன் நிறைவேற்றி வருகிறார்கள். குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளில் பேருந்து வசதிகள் இல்லாத பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் குலசேகரம் முதல் தக்கலை வரையிலான புதிய பேருந்து சேவை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தானது குலசேகரத்திலிருந்து திருவட்டார், கட்டைக்கால், மாத்தூர், ஆனையடி,வெட்டுக்குழி வழியாக தக்கலை பேருந்து நிலையத்தினை சென்றடையும். பொதுமக்கள் இப்பேருந்து வசதியினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

அதனைத்தொடர்ந்து  அமைச்சர், ஏற்றக்கோடு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். மேலும் மாத்தூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கான்வாடி  மையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து கேட்டதோடு, குழந்தைகளுடன் உரையாடினார்கள். அத்தோடு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்திட தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கண்ணனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் ஜான் பிரைட், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், ஊராட்சி தலைவர்கள் ஹெப்சிபாய் ரோஸ் (ஏற்றக்கோடு), பால்சன் (குமரன்குடி). போக்குவரத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory