» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு!!!

சனி 6, ஜூலை 2024 4:24:43 PM (IST)

புதுக்கடை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குமரி மாவட்டம், புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் பகுதி நெடுவினையை சேர்ந்தவர் ஹபீஸ்பினு. இவர் இந்திய எல்லைப் படையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுரேகா (35). இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டு,   சிசிட்சையில் இருந்து வந்துள்ளார்.  மேலும் தனியாக தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். கடைசியாக 3-ம் தேதி ஹபீஸ்பினுவின் தம்பி சுரேஷ் என்பவர் சுரேகாவை பார்த்துள்ளார்.  

அதன் பிறகு சுரேகா வீடு பூட்டிய நிலையில், அவரை வெளியில் காணவில்லை. நேற்று சுரேகா  வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது, சுரேகா இறந்து, உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளார்.   இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் உடலை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory