» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு!!!
சனி 6, ஜூலை 2024 4:24:43 PM (IST)
புதுக்கடை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம், புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் பகுதி நெடுவினையை சேர்ந்தவர் ஹபீஸ்பினு. இவர் இந்திய எல்லைப் படையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுரேகா (35). இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டு, சிசிட்சையில் இருந்து வந்துள்ளார். மேலும் தனியாக தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். கடைசியாக 3-ம் தேதி ஹபீஸ்பினுவின் தம்பி சுரேஷ் என்பவர் சுரேகாவை பார்த்துள்ளார்.
அதன் பிறகு சுரேகா வீடு பூட்டிய நிலையில், அவரை வெளியில் காணவில்லை. நேற்று சுரேகா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது, சுரேகா இறந்து, உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் உடலை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி தேர்தல் களம்: 5 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை? விஜய் வருகையால் சவாலா?
செவ்வாய் 17, மார்ச் 2026 11:03:39 AM (IST)

பைக் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: இருவர் உயிரிழப்பு - பயணிகள் மீட்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:39:43 AM (IST)

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

