» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஐடிஐகளில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியர் ஸ்ரீதர் தகவல்
செவ்வாய் 11, ஜூன் 2024 10:47:42 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு வரும ஜீன் 13-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. தற்போது மாணவர் சேர்க்கைக்கு வரும் ஜீன் 13-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-25-ம் ஆட்டிற்கான அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கைப்பேசி எண், இ-மெயில் முகவரி, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட்அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவில். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் (SMRV), நாகர்கோவில் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களிலுள்ள உதவி மையம் மூலமாகவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், கோணம், நாகர்கோவில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டுமே. டெபிட் கார்டு, ஜிபே அல்லது நெட் பேக்கிங் மூலம் செலுத்தலாம்.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750, பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக்கருவி, காலணி, இலவச பேருந்து பயண அட்டை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)
