» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
வியாழன் 6, ஜூன் 2024 3:55:41 PM (IST)
கன்னியாகுமரியில் வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் பெல்கியாஸ்(39). இவர் சவுதி அரேபியாவில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனால் வீட்டை அவரது தம்பி பராமரித்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 33 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)
