» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு: நாகர்கோவில் அருகே பரபரப்பு!

சனி 18, மே 2024 5:09:44 PM (IST)



நாகர்கோவில் அருகே மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடி சாஸ்திரி நகர் பகுதியில் நேற்று ஓடையில் வலையில் மலைப்பாம்பு சிக்கி கிடந்தது. பின்னர் அது நகர்ந்து சரண்யா என்பவரது வீட்டின் முன் பதுங்கியது. மீன்பிடி வலையில் சிக்கி இருந்ததை கண்ட சரண்யா, தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்து சென்று வன பகுதியில் விட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory