» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜூன் 30ல் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம்
புதன் 15, மே 2024 11:09:25 AM (IST)
நாகர்கோவிலில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ளது
நாகர்கோவில் இறச்சகுளம் அம்ருதா பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். அம்ருதா மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் இருதயவியல் ஆலோசகர்கள் வருகை தருகிறார்கள். 18 வயதுக்குக் கீழ்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குழந்தைகளுக்கு அமிர்தா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனை நடைமுறைகள் வழங்கப்படும்.
நாகர்கோவில் இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து முகாம் நடைபெறும் இடத்திற்கு இலவச பேருந்து வசதி உள்ளது. முகாமில் பங்கேற்க கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும். முன் பதிவு செய்ய 89215 08515 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

