» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர் கைது: 34 பவுன் நகை மீட்பு!
புதன் 15, மே 2024 11:04:04 AM (IST)
குமரி மாவட்டத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்து, 34 பவுன் தங்க நகை 1125 கிராம் வெள்ளியை மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டிய வீட்டை உடைத்து நகைகளை திருடி சென்றதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திசையன் விளையை சேர்ந்த தவசிப்பால் என்பவரை விசாரித்ததில் திருட்டில் ஈடுபட்ட நபர் என்று தெரியவந்தது. இவர் மீது ஆரல்வாய் மொழி பூதப்பாண்டி கோட்டார் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 34 பவுன் தங்க நகை 1125 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)

கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு.
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:00:16 PM (IST)

நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்த நகலை எரித்து போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:53:22 PM (IST)

நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 3:21:08 PM (IST)

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை : அமைச்சர் வழங்கினார்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:34:43 AM (IST)

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)


.gif)
Ponmariappanமே 15, 2024 - 11:16:36 AM | Posted IP 162.1*****