» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர் கைது: 34 பவுன் நகை மீட்பு!
புதன் 15, மே 2024 11:04:04 AM (IST)
குமரி மாவட்டத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்து, 34 பவுன் தங்க நகை 1125 கிராம் வெள்ளியை மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டிய வீட்டை உடைத்து நகைகளை திருடி சென்றதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திசையன் விளையை சேர்ந்த தவசிப்பால் என்பவரை விசாரித்ததில் திருட்டில் ஈடுபட்ட நபர் என்று தெரியவந்தது. இவர் மீது ஆரல்வாய் மொழி பூதப்பாண்டி கோட்டார் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 34 பவுன் தங்க நகை 1125 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)



Ponmariappanமே 15, 2024 - 11:16:36 AM | Posted IP 162.1*****