» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர் கைது: 34 பவுன் நகை மீட்பு!
புதன் 15, மே 2024 11:04:04 AM (IST)
குமரி மாவட்டத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்து, 34 பவுன் தங்க நகை 1125 கிராம் வெள்ளியை மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டிய வீட்டை உடைத்து நகைகளை திருடி சென்றதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திசையன் விளையை சேர்ந்த தவசிப்பால் என்பவரை விசாரித்ததில் திருட்டில் ஈடுபட்ட நபர் என்று தெரியவந்தது. இவர் மீது ஆரல்வாய் மொழி பூதப்பாண்டி கோட்டார் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 34 பவுன் தங்க நகை 1125 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)


Ponmariappanமே 15, 2024 - 11:16:36 AM | Posted IP 162.1*****