» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெற்ற தாயை குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன்.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்
செவ்வாய் 20, பிப்ரவரி 2024 11:37:56 AM (IST)

நித்திரவிளை அருகே பெற்ற தாயை தாக்கி குழிக்குள் தள்ளி மகன் கொல்ல முயன்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டு பின்புறத்தில் மூதாட்டி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூத்த மகன், அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் திடீரென அங்கிருந்த ஒரு குழிக்குள் தள்ளிவிட்டார்.
பின்னர் அங்கு கிடந்த ஒரு கட்டையை எடுத்து தாயாருக்கு மிரட்டல் விடுத்து சென்றார். மேலும் மகனின் தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மகன், தாய் தகராறு சம்பவத்தை இளைய மருமகள் தட்டிக்கேட்டதோடு அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான்கு வழிச்சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது: 6 மோட்டார் பைக் பறிமுதல்
திங்கள் 27, அக்டோபர் 2025 8:45:36 AM (IST)

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

கன்னியாகுமாரியில் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!
சனி 25, அக்டோபர் 2025 11:55:11 AM (IST)

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
சனி 25, அக்டோபர் 2025 10:59:02 AM (IST)

அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு..!
சனி 25, அக்டோபர் 2025 8:42:07 AM (IST)


.gif)