» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெற்ற தாயை குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன்.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்
செவ்வாய் 20, பிப்ரவரி 2024 11:37:56 AM (IST)

நித்திரவிளை அருகே பெற்ற தாயை தாக்கி குழிக்குள் தள்ளி மகன் கொல்ல முயன்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டு பின்புறத்தில் மூதாட்டி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூத்த மகன், அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் திடீரென அங்கிருந்த ஒரு குழிக்குள் தள்ளிவிட்டார்.
பின்னர் அங்கு கிடந்த ஒரு கட்டையை எடுத்து தாயாருக்கு மிரட்டல் விடுத்து சென்றார். மேலும் மகனின் தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மகன், தாய் தகராறு சம்பவத்தை இளைய மருமகள் தட்டிக்கேட்டதோடு அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
