» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குழந்தைகளுக்கான குறும்படங்கள்: அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்!
திங்கள் 12, பிப்ரவரி 2024 4:23:35 PM (IST)

குழந்தைகள் பெற்றோருடன் குடும்பமாக வளர்வதன் முக்கியத்துவத்தை பற்றியும், வளர்ப்புப் பராமரிப்பு சேவையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்டுள்ள "விதை” மற்றும் "நிழல்" ஆகிய இரு குறும்படங்களை அமைச்சர் பி. கீதா ஜீவன் வெளியிட்டார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்புத்துறை, யூனிசெப் (UNICEF) மற்றும் சியாப் (SIAPP) அமைப்பும் இணைந்து குழந்தைகள் பெற்றோருடன் ஒரு குடும்பமாக வளர்வதன் முக்கியத்துவத்தை பற்றியும், வளர்ப்புப் பராமரிப்பு சேவையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் குடும்ப அமைப்பில் வளர்வதை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள "விதை” மற்றும் "நிழல்" ஆகிய இரு குறும்படங்களை சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசுச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர் இரா.சீதாலட்சுமி, இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் மற்றும் சியாப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சியாமளா நடராஜ், திட்ட இயக்குநர் கே.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

