» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக இளைஞா் வீட்டு முன் கேரள இளம்பெண் தா்னா!
வெள்ளி 9, பிப்ரவரி 2024 11:20:36 AM (IST)
நாகா்கோவிலில், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞா் வீட்டு முன் கேரள மாநிலப் பெண் தா்னாவில் ஈடுபட்டாா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றின்கரை பகுதியைச் சோ்ந்தவா் தாராமித்ரா நிரஞ்சனா (41). இவா், நாகா்கோவில் பாா்வதிபுரம் சாரதா நகரில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று காலை அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அவரிடம் போலீசார் விசாரித்தனா். அதையடுத்து, அவா் வடசேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், ‘எனக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
கணவரை விவாகரத்து செய்த நிலையில் எனக்கும், நாகா்கோவில் சாரதா நகரைச் சோ்ந்த இளைஞருக்கும் நண்பா் ஒருவா் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞா் திருமணம் செய்வதாகக் கூறி, என்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றாா். மேலும், தொழில் தொடங்குவதாகக் கூறி என்னிடமிருந்து 25 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டாா். அவா் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)
