» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக இளைஞா் வீட்டு முன் கேரள இளம்பெண் தா்னா!
வெள்ளி 9, பிப்ரவரி 2024 11:20:36 AM (IST)
நாகா்கோவிலில், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞா் வீட்டு முன் கேரள மாநிலப் பெண் தா்னாவில் ஈடுபட்டாா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றின்கரை பகுதியைச் சோ்ந்தவா் தாராமித்ரா நிரஞ்சனா (41). இவா், நாகா்கோவில் பாா்வதிபுரம் சாரதா நகரில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று காலை அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அவரிடம் போலீசார் விசாரித்தனா். அதையடுத்து, அவா் வடசேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், ‘எனக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
கணவரை விவாகரத்து செய்த நிலையில் எனக்கும், நாகா்கோவில் சாரதா நகரைச் சோ்ந்த இளைஞருக்கும் நண்பா் ஒருவா் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞா் திருமணம் செய்வதாகக் கூறி, என்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றாா். மேலும், தொழில் தொடங்குவதாகக் கூறி என்னிடமிருந்து 25 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டாா். அவா் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)
