» செய்திகள் - விளையாட்டு » உலகம்
லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!
வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)

தடைகளை மீறியதற்காக லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெனிசுலாவுக்கு சொந்தமான டேங்கர் எண்ணெய் கப்பல் ஒன்று, லெபனானின் போராளி குழுவான ஹிஸ்புல்லாவுடன தொடர்புடைய நிறுவனத்துக்கு சரக்குகளை கொண்டு சென்றதாக கூறி ஒரு கப்பலுக்கு அமெரிக்க கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்தது.
இதுபோல மேலும் ஒரு கப்பலுக்கும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல்களை அமெரிக்கா கண்காணித்து தேடி வந்தது. இந்த நிலையில் லெபனானின் 2 கப்பல்களை சிறைபிடித்து பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘அமெரிக்காவின் தடைகளை மீறியதற்காக பெல்லா 1 என்ற வர்த்தகக் கப்பலையும், கரீபியன் கடலில் சோபியா என்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)


