» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!

திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)



இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். வன்முறையில் 25 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய குடியேற்ற மசோதாவை அறிவித்து சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்து நாடு கடத்தி வருகிறார். மேலும் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.

இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள், பதவிகள், அதிகார சலுகைகள் பறிபோவதாக அந்த நாட்டினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் நேற்று தலைநகர் லண்டனை முற்றுகையிட்டு வெளிநாட்டினர், புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது. போராட்ட பேரணியில் சுமார் 1½ லட்சம் பேர் திரண்டனர். இதனால் லண்டன் நகரம் குலுங்கியது.

போராட்டக்காரர்கள் தேசிய கொடி ஏந்தி வந்தனர். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு எதிராக பதாகைகளை கையில் வைத்திருந்தனர். டாமி ராபின்சனுக்கு எதிராக மற்றொரு தரப்பை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இந்த பேரணியில் பங்கேற்றனர். இருதரப்பினரும் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி போட்டிப்போட்டு கோஷமிட்டனர்.

அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தடுக்க முயன்ற 26 போலீசார் படுகாயம் அடைந்தனர். இருந்தபோதிலும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிரான பேரணியை ஆதரித்தார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் வீடியோ காலில் அவர் பேசினார். அப்போது அவர், "நீங்கள் வன்முறையை தேர்ந்தெடுக்காவிட்டாலும், அது உங்களை தேடி வருகிறது. எதிர்த்து போராட வேண்டும் அல்லது சாக வேண்டும். கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசை கவிழ்க்க வேண்டும்” என அறைகூவல் விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory