» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த ஆகஸ்ட் 24 வரை தடை நீட்டிப்பு
சனி 19, ஜூலை 2025 12:18:52 PM (IST)
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை ஆகஸ்ட் 24-ம்தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 7-ம்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. இதற்கிடையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.
இதனிடையே இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை ஏப்ரல் 23-ம்தேதி இந்தியா மூடியது. சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளின்படி, ஒரு மாதம் வரையே ஒரு நாடு தன்னுடைய வான்வெளியை மூட முடியும். பின்னர் இந்த தடை ஜூன் 24-ம்தேதி வரையும், தொடர்ந்து ஜூலை 24-ம்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது.
அதேபோல பாகிஸ்தான் அரசும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியாத வகையில், ஜூலை 24-ம்தேதி வரை அதன் வான்வெளியை மூடி உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை ஆகஸ்ட் மாதம் 24-ம்தேதி வரை நீட்டித்துள்ளதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3:50 மணிக்கு அமலுக்கு வந்த விமான வீரர்களுக்கான அறிவிப்பின்படி (NOTAM), இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் எந்த விமானமோ, அல்லது இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட ராணுவம் மற்றும் சிவில் விமானங்களோ பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை ஆகஸ்ட் 24 காலை 5:19 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடிக்கு 23 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
புதன் 3, செப்டம்பர் 2025 10:44:40 AM (IST)

கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: இலங்கை அதிபர் திட்டவட்டம்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:36:59 PM (IST)

அமெரிக்க - இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:42:00 PM (IST)

ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:43:39 PM (IST)

போர் நெருக்கடியை தீர்க்க முயற்சி: இந்தியா, சீனா தலைவர்களுக்கு புதின் பாராட்டு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:50:51 PM (IST)

ஷாங்காய் மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் : பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:19:14 PM (IST)
