» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக்கூறிய புதின், இந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளர்.
மேலும் இந்தியா - ரஷியா உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியும் புதினும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ரஷியா- இந்தியா இடையேயான வருடந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு பங்களிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்த நிலையில், ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புகண்டனம்
திங்கள் 7, ஜூலை 2025 5:20:18 PM (IST)

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்
ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)
