» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சோவியத் யூனியன் வெற்றி தினம்: 3 நாள்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்தார் ரஷிய அதிபர் புதின்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:35:33 AM (IST)
இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர்புதின் அறிவித்துள்ளார்.

இது குறித்து ரஷிய அதிபர்மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 1945-ஆம் ஆண்டில் நாஜிக்களின் ஜொ்மனியை ரஷியா வெற்றி கொண்டதை முன்னிட்டு மே 8 முதல் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, உக்ரைனில் 72 மணி நேரத்துக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் அறிவிக்கப்படும் இந்தப் போர்நிறுத்தம், மே 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவடைகிறது. உக்ரைனும் இந்த போர்நிறுத்தத்தை பின்பற்றும் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் விமா்சனம்: ஏற்கெனவே, டிரம்ப் முன்வைத்துள்ள 30 நாள் போர்நிறுத்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ள உக்ரைன், புதினின் இந்த 3 நாள் போர்நிறுத்தம் வெறும் கண்துடைப்பு என்று விமா்சித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர்ஆண்ட்ரி சிபிஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷியாவுக்கு உண்மையிலேயே அமைதியின் மீது அக்கறை இருந்தால் அந்த நாடு உடனடி போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 30 நாள்களுக்காவது அந்த போர்நிறுத்தம் நீடித்திருக்க வேண்டும்’ என்றார்.
இதற்கு முன்னதாக, ஈஸ்டர்தினத்தை முன்னிட்டு 30 மணி நேர போர்நிறுத்தத்தக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வதாக உக்ரைனும் அறிவித்தது. இருந்தாலும், போர்நிறுத்தத்தை மீறி தங்கள் மீது தாககுதல் நடத்தியதாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.
அதே போல், எரிசக்தி மையங்கள் மீது 30 நாள்களுக்கு தாக்குதல் நடத்துவதில்லை என்று ரஷியாவும், உக்ரைனும் அமெரிக்கா முன்னிலையில் கடந்த மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறியதாக ரஷியா மீது உக்ரைனும், உக்ரைன் மீது ரஷியாவும் அடிக்கடி குற்றஞ்சாட்டின. இந்தச் சூழலில், இரண்டாம் உலகப் போர்வெற்றி விழாவை முன்னிட்டு உக்ரைனில் 3 நாள்களுக்கு போரை நிறுத்திவைப்பதாக தற்போது விளாதிமீர்புதின் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
