» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்க தேசத்திற்கு மீண்டும் வருவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால்
புதன் 19, பிப்ரவரி 2025 10:55:40 AM (IST)
"வங்கதேசத்துக்கு மீண்டும் வருவேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்" என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிளில் காணொலி வாயிலாக அவர் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், வங்கதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா உரையாற்றியதாவது: நான் திரும்பி வருவேன். அதனால் தான் அல்லா என்னை உயிருடன் வைத்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நான் உதவி செய்வேன். போராட்டத்தின் போது மக்களை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெறுவதை உறுதி செய்வேன். முகமது யூனுஸ் ஆட்சி செய்ய தகுதியற்றவர். கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு யூனுஸின் ஆட்சியின் கீழ் நீதி கிடைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீனா பதிலடி வரி வரியை திரும்பப் பெறாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:16:57 PM (IST)

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாணின் மகன் காயம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:12:10 PM (IST)

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு: அமெரிக்காவில் பொதுமக்கள் போராட்டம்!
திங்கள் 7, ஏப்ரல் 2025 3:49:47 PM (IST)

ஜப்பானில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: டாக்டர் உள்பட 3 பேர் பலி
திங்கள் 7, ஏப்ரல் 2025 3:42:50 PM (IST)

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா : குழந்தைகள் உள்பட 18 பேர் பலி
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:21:26 AM (IST)

இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: அதிபர் திசநாயக்க உறுதி
சனி 5, ஏப்ரல் 2025 3:30:36 PM (IST)
