» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.8,365 கோடி ஆயுத உதவி: பைடன் நிர்வாகம் அறிவிப்பு
திங்கள் 9, டிசம்பர் 2024 12:49:26 PM (IST)
ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு மேலும் ரூ.8,365 கோடி ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதில் பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் போர் தொடங்கிய நாள்முதல் ரூ.5.37 லட்சம் கோடிக்கும் அதிகமான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியது. அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்க உள்ளார். டிரம்ப் நிர்வாகம் உக்ரைனுக்கு உதவிகளை வழங்குமா? அல்லது குறைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே உக்ரைனுக்கு வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து உக்ரைனின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் விதமாக மேலும் ரூ.8,365 கோடி நிதியை பைடன் நிர்வாகம் விடுவித்துள்ளது. இது ரஷ்யாவுக்கு எதிரான தீவிர தாக்குதலை நடத்தி வரும் உக்ரைன் ராணுவம் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைள், வெடிமருந்துகளை வாங்கவும், பராமரிக்கவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)
