» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.8,365 கோடி ஆயுத உதவி: பைடன் நிர்வாகம் அறிவிப்பு
திங்கள் 9, டிசம்பர் 2024 12:49:26 PM (IST)
ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு மேலும் ரூ.8,365 கோடி ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதில் பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் போர் தொடங்கிய நாள்முதல் ரூ.5.37 லட்சம் கோடிக்கும் அதிகமான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியது. அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்க உள்ளார். டிரம்ப் நிர்வாகம் உக்ரைனுக்கு உதவிகளை வழங்குமா? அல்லது குறைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே உக்ரைனுக்கு வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து உக்ரைனின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் விதமாக மேலும் ரூ.8,365 கோடி நிதியை பைடன் நிர்வாகம் விடுவித்துள்ளது. இது ரஷ்யாவுக்கு எதிரான தீவிர தாக்குதலை நடத்தி வரும் உக்ரைன் ராணுவம் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைள், வெடிமருந்துகளை வாங்கவும், பராமரிக்கவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெட்பிளிக்ஸ் மொத்த படமும் நொடியில் டவுன்லோடு : இணைய வேகத்தில் ஜப்பான் உலக சாதனை!!
சனி 12, ஜூலை 2025 5:32:49 PM (IST)

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)

பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)

விசா இல்லாமல் பயணிக்க 74 புதிய நாடுகளுக்கு சீனா அனுமதி : பட்டியலில் இந்தியா இல்லை!!
புதன் 9, ஜூலை 2025 11:45:34 AM (IST)

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)
