» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இம்ரான் கானை விடுவிக்க கோரி போராட்டம்: தெரீக்-இ-இன்சாப் கட்சியினர் 700 பேர் கைது!
வெள்ளி 4, அக்டோபர் 2024 12:40:09 PM (IST)

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க கோரி போராட்டம் நடத்திய தெரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த 700 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஆண்டு 2023, ஆகஸ்ட் 5 முதல் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுவிக்க வலியுறுத்தி அவரது கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டமும் அந்நாட்டில் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
இம்ரான் கானை, சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும், விலைவாசியை கட்டுப்படுத்தக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் போராட்டங்களால் பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
மேலும், "இனிமேலும் காத்திருக்க மாட்டோம், பொறுமையாக இருக்க மாட்டோம். எங்களை கட்டுப்படுத்த முடியாது. நாட்டிற்காக போராட தயாராக உள்ளோம். வெற்றியோ அல்லது தோல்வியோ எங்கள் போராட்டத்தை வலுப்படுத்துவோம்" என்று இம்ரான் கான் கட்சியின் நிர்வாகிகள் கூறினர். இதனால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)

சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்பு : இந்திய வம்சாவளி ஆலோசகர் அமெரிக்காவில் கைது
புதன் 15, அக்டோபர் 2025 11:48:01 AM (IST)

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)
