» செய்திகள் - விளையாட்டு » உலகம்
குற்ற வழக்கில் சிக்கிய மகனை மன்னிக்கவே மாட்டேன்: ஜோ பைடன் திட்டவட்டம்
சனி 8, ஜூன் 2024 11:58:18 AM (IST)

குற்ற வழக்கில் சிக்கிய மகனை மன்னிக்கவே மாட்டேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்க முயற்சித்தது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக டெலாவேர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் முதல் முறையாக அதிபரின் மகன் மீது இத்தகைய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் அந்நாட்டின் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த வழக்கில் தனது மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கவே மாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறுகையில், அமெரிக்க அதிபர் தனது மகனை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வழக்கு தற்போது கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை: இந்திய ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:36:25 AM (IST)

போருக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் ஈரான்: மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 5:45:45 PM (IST)

ஈரான் உடனான 2ஆம் கட்ட அமைதிப்பேச்சுவார்த்தை : அமெரிக்க துணை அதிபர் பங்கேற்கவில்லை
சனி 25, ஏப்ரல் 2026 12:03:38 PM (IST)

ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:00:28 PM (IST)

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஏப். 27-ல் கையெழுத்தாகிறது
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:14:18 PM (IST)

இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை: பிரான்ஸ் அரசு அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:17:03 AM (IST)

