» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 18ஆக அதிகரிப்பு!
வியாழன் 6, ஜூன் 2024 12:10:50 PM (IST)
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு 18 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் பரீதாபாத் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜீஷன் என்பவரின் மகள் அலிஷா (17), அர்ஷத் என்பவரின் மகன் உமைர் (15), முபாரக் என்பவரின் மகன் அப்பாஸ் அலி (14) மற்றும் மெஹர் பாக்ரி என்பவரின் மகன் தோடா (25) ஆகிய 4 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
ஜீஷனின் மகன் முகமது ஹசன் என்ற அலி ஹைதர் இந்த வெடிவிபத்தில் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், மகளும் உயிரிழந்து விட்டார். 5 வயது மகள் கின்ஜா சிகிச்சை பெற்று வருகிறார். முறையான அனுமதி இன்றி கேஸ் சிலிண்டர் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன என அரசு நிர்வாகம் கூறி வருகிறது.
சட்டவிரோத, கியாஸ் மற்றும் சி.என்.ஜி. நிரப்பு நிலையங்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி துறை நிறுவன உயரதிகாரிகளுக்கு காவல் துணை ஆணையாளர் ஜெய்ன் உல் அபிதின் மேமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டவிரோத விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்துறை செயலாளருக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளார்.
இதேபோன்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய உபகரணங்கள், முறையான ஐ.சி.யு. வார்டுகள் உள்ளிட்டவை இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 20 ஆண்டுகளாக தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க போதிய கட்டிட வசதிகள் இல்லை என டாக்டர் தஹீர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்: ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 12:14:10 PM (IST)

லிபியாவில் 10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக குடியமர்த்த டிரம்ப் திட்டம்
சனி 17, மே 2025 11:57:22 AM (IST)

வங்கி கடன் மோசடி வழக்கில் பிரிட்டனில் கைது: நீரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி
வெள்ளி 16, மே 2025 12:47:48 PM (IST)

பாக். விமான தளங்களை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி: போர் நிபுணர்
வியாழன் 15, மே 2025 5:36:04 PM (IST)

போர்களை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம்: புதிய போப் லியோ அறிவிப்பு!
புதன் 14, மே 2025 5:54:45 PM (IST)

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு !
செவ்வாய் 13, மே 2025 11:47:43 AM (IST)
