» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியப் புடவைகளை எரிக்க வேண்டுமா? எதிர்கட்சிகளுக்கு வங்கதேச பிரதமர் பதிலடி!!
திங்கள் 1, ஏப்ரல் 2024 9:31:33 PM (IST)
வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட சமையல் பொருள்களை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இவற்றை பயன்படுத்தாமல் எதிர்க்கட்சியினர் சமையல் செய்து உண்பார்களா? என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், வங்கதேச தேர்தலில் ஹேக் ஹசீனாவுக்கு இந்தியா உதவியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற பிரசாரத்தை வங்கதேச எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தொடங்கியது. சமூகவலைதளங்களில் இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம் என பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அமைதிகாத்துவந்த பிரதமர் ஷேக் ஹசீன தற்போது காட்டமாக பதிலளித்துள்ளார். தாகா தலைமை அலுவலகத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர்களின் மனைவி வைத்திருப்பது எத்தனை இந்திய புடவைகள் எத்தனை தெரியுமா? பங்களாதேஷ் தேசிய கட்சி தலைவர்கள் இந்திய பொருள்களை புறக்கணிக்க வலியுறுத்துகிறார். அவர்கள் தங்கள் மனைவியிடம் இருக்கும் இந்திய புடவைகளை புறக்கணிக்காதது ஏன்?
தங்கள் கட்சி அலுவலகம் முன்பு தங்கள் மனைவியின் இந்திய புடவைகளை எரிப்பார்களா? அப்படி செய்தால், உண்மையாகவே அவர்கள் இந்தியப் பொருள்களை புறக்கணிப்பதாக ஏற்றுக்கொள்ளலாம். எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அவர்களின் மனைவி இந்தியாவிற்கு சென்று புடவைகளை வாங்கிவருவதோடு மட்டுமின்றி, இங்கு விற்பனையும் செய்துள்ளனர். இந்திய ஆடைகளை மட்டுமல்ல, மசாலா பொருள்களையும் அவர்கள் புறக்கணிப்பார்களா?
வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட சமையல் பொருள்களை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இவற்றை பயன்படுத்தாமல் அவர்கள் சமையல் செய்து உண்பார்களா? இதற்கு எதிர்க்கட்சி முதலில் பதில் கூற வேண்டும் என கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் தயாரிப்பில் இந்தியா, சீனா முக்கிய பங்கு : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:39:20 PM (IST)

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

இந்தியன்Apr 2, 2024 - 07:00:42 PM | Posted IP 172.7*****